அவர், கோவை தமிழ்நாடு வேலாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘விக்சித் பாரதத்திற்காக விவசாயக் கல்வி, கண்டுபிடிப்பு மற்றும் முயற்சிகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், பெண்கள் தொடக்க நிறுவனங்கள் மற்றும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் நிகழ்வில் பங்கேற்றனர்.
“இந்தியா ஒரு காலத்தில் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்த நாடாக இருந்தோம். இன்று நாம் உணவுப் பாதுகாப்பில் சுயநிலைப்படைத்துள்ளோம்,” என துணை ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இன்றைய நிலையில், இந்தியா உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கிறது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 11% அளவுக்கு விவசாயப் பொருட்கள் பங்கு வகிக்கின்றன. விவசாயம் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (GDP) 16% பங்களிக்கிறது.
இப்போது, விவசாயிகள் செழித்து வாழ வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும் என்றும், இதற்கான மாற்றத்தை விவசாயப் பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவனங்களே வழிவகுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விவசாயி உற்பத்தியாளராக மட்டுமல்லாமல், தன் தயாரிப்பை சந்தைப்படுத்தும் தொழில்முனைவோராக மாற வேண்டும். இளைஞர்களும் கல்வி நிறுவனங்களும் விவசாயிகளை தொழில்முனைவோர்களாக மாற்ற ஊக்குவிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும், விவசாயத் துறையில் பெரும்பணிகள் செய்யும் நிறுவனங்களும், உண்மையான மற்றும் நீடித்த உறவுகளை விவசாயிகளுடன் ஏற்படுத்த வேண்டும் என்று துணை ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.
“இந்தியாவின் எதிர்காலம் நமது நிலங்களின் வளத்திலும், விவசாயிகளின் உற்சாகத்திலும், கல்வி மற்றும் கண்டுபிடிப்புத் தளங்களான நிறுவனங்களில் வடிவெடுக்கிறது,” என்று ஜகதீப் தன்கர் உரையில் கூறினார்.
Leave a Reply