கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 21-ஆவது பட்டமளிப்பு விழா இக் கல்லூரியின் வளாகத்தில் நடை பெற்றது.
இந்த கல்விக் குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ். மலர்விழி இப்பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். இவ் விழாவில் இக் கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி கே. சுந்தரராமன் கலந்து கொண்டார். இக் கல்லூரியின் முதல்வர் ஜே. ஜேனட் அனைவரையும் வரவேற்று கல்லூரியின் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் கல்வி இடைமுக திட்டத்தின் பிராந்தியத் தலைவர் கணேஷ் திருநாவுக்கரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1237 பட்டதாரிகளுக்கு பட்டமளித்து, 33 ரேங்க் பெற்றவர்களை கவுரவம் செய்து பாராட்டினார்.
இவ்விழாவில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply