​ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டுவிழா

sri ramakrishna polytechnic college
Spread the love

கோவை ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா நடைப்பெற்றது.

இவ்விழாவில் கட்டிடவியல் துறை தலைவர் கே.நிவேதிதா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் டாக்டர்  டி.கோபாலகிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர் சுந்தர் விழாவிற்கு தலைமை தாங்கி பேசினார்.

சிறப்பு விருத்தினராக சிந்தனைக் கவிஞர். கவிதாசன், தலைவர் மனிதவள மேம்பாட்டுத்துறை, ரூட்ஸ் நிறுவனங்கள், கோவை. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் மாணவர்களிடம் பேசும்போது வாழ்க்கையை சிறந்ததாக மாற்ற விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் கூடிய உழைப்பு மிக முக்கியம்.  உயரத்தை அடைய வேண்டுமெனில் அதற்கு அயராத பயிற்சி மற்றும் முயற்சி மிக முக்கியம் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் வாய்ப்புக்காக காத்திருத்தல் என்பது கால விரயத்தை உண்டாக்கும். தகுதி உள்ளவர்களிடம் வாய்ப்பு தேடி வரும் என்றார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் அனைத்து தகுதிகளின் அடிப்படையில் சிறந்த மாணவராக கட்டிடவியல் துறை வி.எஸ்..முகந்த் பிரணவ் தேர்ந்தெடுக்கப்பட்டார் அவருக்கு  வி ராஜயலட்சுமி நினைவு பரிசு ரூபாய் நான்காயிரம் பரிசுத்தொகையுடன் கேடயம், மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. கல்லூரியின் ஒவ்வொரு துறையிலும் சிறப்பிடம் பெற்றவர்களில் இயந்திரவியல் துறையில் ஏ.எஸ். லூகா டோனி, ஆட்டோமொபைல் துறையில் என். ஜே.. ஜலகண்டேஸ்வர், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் எஸ் ராஜா சுப்பிரமணி, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையில் எம் தர்ஷன், இன்ஸ்ட்ருமெண்டேஷன் அண்ட் கண்ட்ரோல் இன்ஜினியரிங் துறையில் எஸ்.பொன்லிங்கராஜா, கணிப்பொறியியல் துறையில் ஜே. ஜோனத்தான் வில்ஃபரட், ஆகியோருக்கு பரிசுத்தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கபட்டனர்.

பின்னர் மாலையில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் கல்லூரி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் திரளாக  கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.​ விழாவின் இறுதியாக மின்னியல் மற்றும் மின்னணுவியல் தலைவர் துறை தலைவர் நிரஞ்சனா தேவி நன்றி கூறினார்