கோவை காளப்பட்டி விளாங்குறிச்சியில் பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் முயற்சியில் “மோடி சேவா மையம்” தொடங்கப்பட்டது.
கோவை மாநகர் மாவட்ட துணை தலைவர் கே.என்.சி.ராஜேந்திரன் தலைமையில், பாலாஜி உத்தமராமசாமியால் தொடங்கி வைக்கபட்டது.
மத்திய அரசின் ஆயுள் காப்பீடு, சாலையோர வியாபாரிகள் கடனுதவி திட்டம், பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு திட்டம், தபால் வங்கி கணக்கு, செல்வ மகள் சேமிப்பு திட்டம் போன்ற திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்ல இந்த சேவை மையம் ஓய்வின்றி பணியாற்றும்.
கடந்த மூன்று வருடங்களாக இந்த திட்டங்களை காளப்பட்டி மக்களுக்கு எடுத்து சென்று ஆயிரக்கணக்கான மக்களுக்கு சேவை அளித்து பாரத பிரதமரிடம் பாராட்டு பெற்ற காளப்பட்டி பாஜக இளைஞரணி தலைவர் மனோஜ் ஆறுச்சாமி தலைமையில் இந்த மையம் செயல்படும்.
Leave a Reply