வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு

s p velumani
Spread the love

வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு
சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்கர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதால், தமிழக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

1954ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வக்ஃபு வாரிய சட்டத்தில் மத்திய அரசு தற்போது திருத்தங்களை மேற்கொண்டு, புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பாக, மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் முன்வைத்தார்.

இந்த தீர்மானத்திற்காக சட்டமன்றத்தில் உரையாற்றிய எஸ்.பி. வேலுமணி, “மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு வாரிய திருத்த மசோதா, இஸ்லாமியர்களின் பல்வேறு உரிமைகளை பாதிக்கும் விதமாக உள்ளது. வக்ஃபு வாரியத்திற்கான பல முக்கிய சட்டங்களை மத்திய அரசு மாற்றியுள்ளது. மேலும், நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரித்துள்ளது.

இந்த திருத்தங்களால், இஸ்லாமிய பெண்களின் வாழ்வியல் நடைமுறையை மாற்றும் பல புதிய விதிகள் கொண்டுள்ளன. தொடக்கம் முதலே அதிமுக இதற்கு எதிராக இருந்துள்ளது. எனவே, இஸ்லாமிய மக்களின் விரோதமாக இருக்கும் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுக முழுமையாக ஆதரிக்கிறது,” என்று குறிப்பிட்டார்.