தமிழக அரசு சார்பில் ஜூன் 2ல் இளையராஜாவுக்கு பாராட்டு விழா   

Spread the love

தமிழக அரசு சார்பில், ஜூன் 2ஆம் தேதி இசை மேதை இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கி, ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. இவர் கடந்த ஜூன் 8ஆம் தேதி, “வேலியண்ட்” என்ற தலைப்பில் உருவாக்கிய சிம்பொனி இசைக்கோர்வையை லண்டனில் வெற்றிகரமாக அரங்கேற்றினார். உலகப் புகழ்பெற்ற ராயல் பில்கார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா குழுவின் ஏற்பாட்டில், அங்குள்ள அப்போலோ அரங்கில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று பெரும் வரவேற்பைப் பெற்றது.

இளையராஜாவின் இசை சிறப்பு, ஜோசப் ஹேடன், வூல்ஃப்காங் அமாடியஸ் மொசார்ட், லுட்விக் வான் பீத்தோவன், பிராண்ஸ் சூபேர்ட், ஃபீலிக்ஸ் மெண்டல்சன் போன்ற இசைஞர்களின் வரிசையில் அவருக்கும் இடம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, இசைப்பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் இளையராஜாவை சிறப்பிக்கும் விதமாக, தமிழக அரசு சார்பில் ஜூன் 2ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறவுள்ளது.