ஈரான் ராணுவம், ஆயிரக்கணக்கான நவீன ஏவுகணைகளை பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில் சேமித்து வைத்திருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த வீடியோவையும், ‘ஏவுகணை நகரம்’ என்ற பெயரில், ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.சமீபத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு, ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிட வேண்டும் என எச்சரித்திருந்தார். ஆனால், அதற்கு முற்றிலும் எதிராக, ஈரான் தனது ராணுவ திறனை வெளிப்படுத்தும் விதமாக 85 வினாடிகள் கொண்ட வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது.மேலும், இன்று தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகளில், வாரத்திற்கு ஒரு ஏவுகணை நகரை உலகிற்கு அறிமுகப்படுத்துவோம் என ஈரான் அறிவித்துள்ளது. இதனால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நிலைமை மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சத்துடன், மேற்கத்திய நாடுகள் கவலையில் உள்ளன.
பூமிக்கு அடியில் ஏவுகணை நகரம் அமைத்துள்ளதா ஈரான்?



Leave a Reply