ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் சார்பில் “அவலாஞ்ச்” விருது வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் சென்னையில் உள்ள யுபிஎஸ் இந்தியா தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை இயக்குனர் வைஜயந்தி ஸ்ரீனிவாசராகவன் கலந்து கொண்டு பேச்சாற்றல், தொழிலில் முன்னேறுவதற்கான திட்டமிடுதல், மனநிறைவு, தொடர் கற்றல், குணம், தங்களைக் கவனித்துக் கொள்ளுதல் போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவிகள் தனி வாழ்விலும் தொழிலும் முன்னேற இந்த இயல்புகள் உதவும் என்றார்.
முன்னதாக விழாவிற்குத் தலைமை தாங்கிப் பேசிய கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா , பல்வேறு சாதனைகள் புரிந்த மாணவிகளையும் பேராசிரியர்களையும் பாராட்டினார். கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் என்.தாஜூநிஷா ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து பல போட்டிகளில் வெற்றிவாகை சூடி பல்வேறு சாதனைகளைப் படைத்த மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக விழாவிற்குத் தலைமை தாங்கிப் பேசிய கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா , பல்வேறு சாதனைகள் புரிந்த மாணவிகளையும் பேராசிரியர்களையும் பாராட்டினார். கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் என்.தாஜூநிஷா ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து பல போட்டிகளில் வெற்றிவாகை சூடி பல்வேறு சாதனைகளைப் படைத்த மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
Leave a Reply