கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை தைப்பூசத் திருவிழா தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத் திருவிழா கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திங்கட்கிழமை திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தார்.

அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில், விநாயகர், வீரபாகு, சூலத்தேவரும், பெரிய தேரில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். காலை 11 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தார்.

அவருடன் பக்தர்களும் அரோகரா… அரோகரா… என பக்தி முழக்கமிட்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Leave a Reply