திருப்பரங்குன்றம் மலையில் விலங்குகளை பலியிட தடை விதிக்க கோரியும்,
திருப்பங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் உயிரினங்களை பலியிடுவதற்கும், மாமிசங்களை சமைக்கவும், உணவு பரிமாறவும், அனுமதி அளிக்க கூடாது என்று கூறியும்,
சிக்கந்தர் தர்கா அதன் கீழ் உள்ள சிக்கந்தர் பள்ளிவாசலை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து
இன்று(3.2.2025) தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக உள்துறை செயலாளர் அவர்களுக்கும், அரசு முதன்மைச் செயலாளர் இந்து சமய அறநிலைத்துறை அவர்களுக்கும் #ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பாக சென்னையில் தலைமை செயலகத்தில் மேற்கொண்ட ஐஏஎஸ் அதிகாரிகளிடம் நேரில் மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு நவாஸ் கனி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சென்னை தலைமை தபால் நிலையத்திலிருந்து குடியரசு தலைவர் அவர்களுக்கும் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பாக விரைவு தபாலில் புகார் மனு
அனுப்பப்பட்டது.
L
லோட்டஸ் மணிகண்டன் நிறுவனத் தலைவர் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம்
Leave a Reply