கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்34-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை வகித்தார்.ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற்றுப் பேசி, கல்லூரியின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசினார்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தக்ஷின் பாரத் ஏரியா ஜெனரல் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கரன் பிர் சிங் பரார் கலந்து கொண்டு, 1,584 இளநிலை மற்றும் 262 முதுநிலை பட்டப்படிப்பு முடித்த 1,846 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் ஒவ்வொரு துறைகளிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி பேசினார். விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply