நல்லறம் அறக்கட்டளை சார்பில் பேரூர் தர்ப்பண மண்டபத்தில் சூரியனுக்கு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மேலை சிதம்பரம் என்று அழைக்கப்படுவது கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ஆகும். இந்த கோவிலை ஒட்டி ஓடும் நொய்யல் ஆற்றின் படித்துறையில் நல்லறம் அறக்கட்டளை சார்பில் ரூ. 15 கோடி மதிப்பில் தர்ப்பண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. தர்ப்பணம் மண்டப வளாகத்தில் நவகிரக கோள்களை வழிபடும் வகையில், ஒன்பது தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஒன்பது கோள்களில் முதன்மையான சூரியனுக்கு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதன் பிரதிஷ்டை விழாவில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி. அன்பரசன் உள்ளிட்ட ஏராளமாக பக்தர்கள் பங்கேற்றனர்.
Leave a Reply