தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கோவை சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ ஜெயராம் திருச்சி சாலையில் மேம்பாலங்கள் கட்டுவது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
அவர் பேசியதாவது., கடந்த 2022 ஆம் ஆண்டு திருச்சி சாலையில் 2.4 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது.
மெட்ரோ ரயில் திட்டத்தால் பணிகள் காலதாமதாமானது. தற்போது, மெட்ரோ ரயில் ஆய்வுப்பணிகள் முடிந்து விட்டன. நெடுஞ்சாலைத்துறையும் ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை 5 முறை ஒப்பந்த புள்ளி கோரப்பட்டும் இறுதி செய்யப்படவில்லை. எனவே ஒப்பந்த புள்ளி இறுதி செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படுமா? என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் 5 முறை ஒப்பந்த புள்ளி கோரப்பட்டும் மதிப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை என ஒப்பந்தாரர்கள் கூறுகின்றனர். எனவே, மறுமதிப்பீட்டு தொகை கோரப்படும். விரைவில் பணிகள் தொடங்கும் என்று பதில் அளித்தார்.
திருச்சி சாலையில் மேம்பாலம் எப்போது கட்டப்படும்? சட்டசபையில் எம்.எல்.ஏ ஜெயராம் கேள்வி

Leave a Reply