கோவை கிராஸ்கட் சாலையில் செயல்பட்டு வரும் ஜவுளி கடை நிறுவனம் ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் இதன் உரிமையாளரான சிவகணேஷ்.
கோவை நரசிபுரம் பகுதியில் வெள்ளியங்கிரி கோசாலை என்னும் பெயரில் கோசாலை அமைத்து சுமார் 3,500 க்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார், மேலும் கோவையில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு காப்பகங்கள் முதியோர் இல்லங்கள் சாலை ஓரங்களில் வசிப்பவர்களுக்கு நாள்தோறும் மூன்று வேலையும் இலவசமாக உணவுகளையும் வழங்கி வருகிறார்.
மேலும் கிராஸ்கட் சாலையில் உள்ள தனது கடை அருகிலேயே நாள்தோறும் இலவசமாக இயலாதவர்கள் உணவருந்திக் கொள்ள இலவச உணவகமும் நடத்தி வருகிறார் இதனாலேயே கோவையின் அடையாளமாக திகழ்ந்து வருகிறார் சிவகணேஷ்.
இந்த நிலையில் அவர் தனது வாடிக்கையாளர்களுக்காகவும் பொது மக்களுக்காகவும் பொங்கல் விழாவை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ் கலாச்சாரம் பாரம்பரியம் தனது அடையாளம் என்ற வகையில் அவரது கடை முன்பு ஜல்லிக்கட்டு காளைகளை அணிவகுத்து நிறுத்தி வைத்துள்ளார். இது தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், “கோவை நரசிபுரம் பகுதியில் வெள்ளியங்கிரி கோசாலை மூலமாக 3500 மாடுகளை வளர்த்து வருகிறேன் குறிப்பாக 250க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து பயிற்சி கொடுத்து பராமரித்து வருகிறேன். ஏராளமான தென் மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றேன். அங்கு எங்களுடைய வெள்ளியங்கிரி கோசாலை காளைகள் என்றாலே ஒரு பயம் இருக்கிறது.
தற்போது நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் தொடர்ந்து கலந்து கொள்ள உள்ளோம். சுமார் 40க்கும் மேற்பட்ட இந்திய நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறேன். அவைகளுக்கு தேவையான மருத்துவர்கள், பயிற்சியாளர்கள், பணியாளர்கள் என அனைவரையும் வைத்துள்ளோம்.
தங்களுடைய கோசாலையில் இருந்து எந்த ஒரு மாடுகளும் வெளியில் கொடுப்பதில்லை. வெளியில் இருந்து எத்தனை மாடுகள் வந்தாலும் அதை அரவணைத்து பராமரித்துக் கொள்கிறோம். தமிழ் தான் என் அடையாளம். தமிழர் பாரம்பரியம் தான் எனது வாழ்க்கை.நமது நாட்டு மாட்டு இனங்களை காப்பதற்காக விரைவில் இனப்பெருக்க மையம் ஆரம்பிக்கவும் உள்ளேன். அதேபோல ஜல்லிக்கட்டு காளைகளை அனைவரும் கண்டு களிக்க வேண்டும் அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எனது கடை முன் ஜல்லிக்கட்டு காளைகளை நிறுத்தி வைத்துள்ளேன்.
அதேபோல் இந்த ஆண்டு பொதுமக்கள் அதிக அளவில் வரவேற்பு கொடுத்துள்ளனர் மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது அடையாளத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டு மிகப்பெரிய பிரம்மாண்ட அளவில் நாட்டு மாடு கண்காட்சிகள் நடத்த உள்ளேன். ” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு காளைகளை தனது கடை முன் காட்சிபடுத்திய ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சிவகணேஷ்

Leave a Reply