முன்னாள் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 36ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு கோவையில் அண்ணாசிலை பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம், முன்னாள் அமைச்சர் செ.மா.வேலுச்சாமி உட்பட பல்வேறு தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் எம்ஜிஆர்-ன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
எம்.ஜி.ஆர் 36ம் ஆண்டு நினைவு தினம் – அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய அதிமுகவினர்

Leave a Reply