, ,

போக்சோவில் சிறையில் உள்ள ஆசிரியரை விடுவிக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்

pocso
Spread the love
கோவை மாவட்டம் ஆலாந்துறை-அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஆனந்தகுமார். இவர் மீது அந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவி ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார். இது குறித்து முதன்மை கல்வி அதிகாரிக்கும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆலந்துறை போலீசார் உடற்கல்வி ஆசிரியர் ஆனந்த குமாரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

.இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் ஆனந்தகுமாரை  கைது செய்தனர் . இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில்.எந்த தவறும் செய்யாத உடற்கல்வி ஆசிரியர் மீது பொய் புகார் சுமத்தி அவரை கைது செய்ததை கண்டித்தும் , அவரை உடனடியாக விடுவிக்க கோரியும்  அந்த பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தார்கள்.