,

கோவையில் மரம் விழுந்து கார் சேதம்

rain
Spread the love

கோவையில் கோடை வெயில் தணிந்து தற்பொழுது கோடை மழை துவங்கி உள்ள நிலையில் மாவட்டத்தின்
பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கன மழையும் சில இடங்களில் பரவலாக மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று பெய்த கனமழையில் கோவை ஆர்.எஸ்.புரம் பால் கம்பெனியருகே உள்ள மரம் விழுந்து கார் ஒன்று சேதமடைந்தது.