,

அடிமைகள் போன்று நடத்துவதாக தூய்மைப்பணியாளர்கள் குற்றச்சாட்டு

#thekovaiherald, #coimbatore
Spread the love

கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபத்தில்  தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள அதிகாரிகள் தங்களை அடிமைகள் போன்று நடத்துவது மற்றும் இழிவாக பேசுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மேலும் பகுதி நேர வேலை, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி மனு அளித்தனர்.

இது குறித்து பேசிய மாவட்ட ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் சங்க உறுப்பினர் ரத்தினகுமார், பகுதி நேர வேலை அளிக்கப்பட வேண்டும் மற்றும் பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்று கூறினார்.
மேலும் அங்குள்ள பொறுப்பாளர்கள்  தூய்மை பணியாளர்களை ஒருமையில் பேசுவது கொத்தடிமைகள் போன்று வேலை வாங்குவது மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தெரிவித்த அவர் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.