தெலங்கானா தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, கே.சந்திரசேகர ராவ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
தெலங்கானாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 60 இடங்களுக்கும் மேல் பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளதால் தெலங்கானாவில் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி தோல்வியை தழுவியதை அடுத்து, முதல்வர் பதவியை கே.சந்திரசேகர ராவ் ராஜினாமா செய்தார். சந்திரசேகர ராவின் ராஜினாமாவை ஏற்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
Leave a Reply