கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பல்நோக்கு மருத்துவமனையில் அரித்மியா போன்ற தீவிரமான இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் அதிநவீன கிரையோ அபலேசன் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிகழ்வில் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லக்ஷ்மி நாராயணசுவாமி கிரையோ அபலேசன் கருவியை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அறிமுகப்படுத்தினார். இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், தலைமை நிர்வாக அதிகாரி, சி.வி. ராம் குமார், இத்தாலியின் மோன்சினோ இருதயவியல் மையப் பேராசிரியர் கிளாடியோ டோன்டோ, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர். அழகப்பன், இதயவியல் துறை நிபுணர்கள் டாக்டர். பாலாஜி, டாக்டர். மனோகரன், இதயவியல் மற்றும் எலெக்ட்ரோபிசியாலஜிஸ்ட் நிபுணர் டாக்டர். விக்ரம் விக்னேஷ், டாக்டர். நந்தகுமார் மற்றும் டாக்டர். மாதேஷ்வரன் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
இதயம் தொடர்பான நோய்களுக்கு பிரத்யேக சிகிச்சை அளித்து வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு கிரையோ அபலேசன் கருவி ஒரு கூடுதல் வரப்பிரசாதம் என்றே குறிப்பிடலாம். இனிவரும் காலங்களில் இதய நோய்களினால் உயிரிழப்பு ஏற்படுவதை கணிசமாகக் குறைக்க முடியும் என ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Leave a Reply