,

வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை சென்ற இளைஞர் உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலை
Spread the love
வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை சென்ற 22 வயது இளைஞர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க ஆண்டுதோறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு  ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறுவர்.

இந்த ஆண்டு அதே போல சிவராத்திரி முடிந்தும் பக்தர்கள் தொடர்ந்து யாத்திரை சென்று வரும் நிலையில், வீரபாண்டியைச் சேர்ந்த ராஜேஸ் என்பவரின் 22 வயது மகன் கிரண் ஞாயிற்றுக்கிழமை  வெள்ளியங்கிரி மலை ஏறினார். அவருக்கு வெள்ளியங்கிரி ஒட்டன் சமாதி என்ற 5வது மலை ஏறும் போது உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.