கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் நலத்திட்ட உதவிகள் குறித்து புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில் அண்ணா, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த புகைப்பட கண்காட்சியில் இரண்டரை ஆண்டுகள் அமைச்சரின் திட்டங்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்பட கண்காட்சி ஒரு வாரத்திற்கு தினசரி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இந்த கண்காட்சியில் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கைவினைப் பொருட்கள் உணவு பலகார அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
Leave a Reply