டிசைன் டிசைனாக வந்து திமுகவினர் ஏமாற்றுவார்கள் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை

sp velumani
Spread the love

திமுக நிர்வாகி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே கோவை மாவட்ட அதிமுக  மகளிரணி, மாணவரணி, பாசறை சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  கடுமையான அறிக்கைகள் மூலம் தமிழக மக்களை காப்பாற்றி கொண்டு இருக்கிறார். திமுக நிர்வாகி 2000 கோடி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.  தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளிலும் கஞ்சா விற்கிறார்கள்.

தமிழகத்தில் மாணவர்களையும் இளைஞர்களையும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக்கி வருகிறார்கள். திமுக பொறுப்பாளர்களும் கஞ்சா விற்கிறார்கள்.  கஞ்சா விற்பனையை திமுக அரசு கட்டுப்படுத்தவில்லை. மத்திய அரசு கஞ்சா விற்பனையை கண்டுபிடித்து கட்டுப்படுத்த வேண்டும். திமுக அரசு 3 ஆண்டுகளில் எந்த திட்டமும் தரவில்லை. விளம்பரத்தில் மட்டுமே இந்த அரசு உள்ளது. திமுக அரசு செய்தது எல்லாம் சொத்து வரி, மின்கட்டணம், பால் விலையை உயர்த்தியது தான். மேலும் 38 எம்பிக்களும் தண்டமாக இருக்கிறார்கள் . அவர்கள் நாடாளுமன்றத்தில் எந்த பிரச்சனை பற்றியும் பேசவில்லை. 40 தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஜெயித்த 38 எம்.பி.க்கள் எதுவும் செய்யாமல் தண்டமாக உள்ளார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் டிசைன் டிசைனாக வந்து திமுகவினர் ஏமாற்றுவார்கள். திமுக அரசு மகளிர் உரிமை தொகை பாதி பேருக்கு தான் தந்துள்ளார்கள், அது திமுக குடும்ப பணம் இல்லை, உங்கள் பணத்தை தான் கொடுக்கிறார்கள். மேலும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கொடுப்பார். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என ஒட்டுமொத்த மக்கள் நினைக்கின்றனர்.

கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும்.    பாஜக உள்ளிட்ட வேறு எந்த கட்சிக்கு அளிக்கும் ஓட்டு செல்லாத‌ ஓட்டாக‌ போகி விடும். அது திமுகவிற்கு சாதகமாகி விடும். ஒவ்வொரு ஓட்டையும் இரட்டை இலைக்கு போட வேண்டும்.  நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெல்லும்.” எட்ன்ர பேசினார்.

பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பிஆர்ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன்,  செ.தாமோதரன், ஏகே.செல்வராஜ்,  விபி.கந்தசாமி, டிகே.அமுல் கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம்,  மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் க்லந்து கொண்டனர். .