தமிழ்நாடு தினத்தையொட்டி, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அந்த பதிவில், அவர் கூறியதாவது:
“தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும், ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்!”
மேலும், மக்கள் எதிர்ப்பு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் என உறுதியளித்த விஜய்,
“மக்கள் விரோத திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்! 2026 இல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!”
என்று தெரிவித்துள்ளார்.
விஜய் மேலும் கூறியதாவது:
“தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும். இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்!”
என தனது பதிவில் கூறியுள்ளார்.
தமிழ்நாடு தினத்தில் வெளியான இந்த அறிக்கை, 2026 தேர்தலை நோக்கி விஜயின் அரசியல் உறுதி மற்றும் மக்கள் மத்தியில் ஒலித்த அரசியல் செய்தியாகக் கருதப்படுகிறது.



Leave a Reply