கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 16ஆவது பட்டமளிப்பு விழா முனைவர் மா. ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்கத்தாவில் உள்ள நூற்றாண்டு பழைமை வாய்ந்த இந்திய விலங்கியல் ஆய்வகத்தின் இயக்குநா் மற்றும் தேசியத் தலைவா் முனைவா் த்ரிதி பானா்ஜி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பட்டதாரிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.
முன்னதாகக் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி அனைவரையும் வரவேற்றுத் தலைமையுரையாற்றினார். பட்டமளிப்பு விழா நிகழ்வைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் மா. லச்சுமணசாமி தொடங்கி வைத்தார். கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் மேனாள் முதல்வா் முனைவா் த. முரளீஸ்வரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பட்டங்களை வழங்கினார். இப்பட்டமளிப்பு விழாவில் இளநிலை மற்றும் முதுநிலைத் தேர்வுகளில் தரவரிசைப் பெற்ற 35 பட்டதாரிகளுக்கு முதலில் பட்டங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இளநிலை பட்டதாரிகள் 1199 பேருக்கும் முதுநிலை பட்டதாரிகள் 252 பேருக்கும் முதுநிலை பட்டயப் படிப்பு (டிப்ளமா) முடித்த 43 பேருக்குமாக மொத்தம் 1494 பேருக்குச் சிறப்பு விருந்தினர் பட்டங்களை வழங்கினார். விழாவின் நிறைவில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் அனைவரும் எழுந்து நின்று உறுதிமொழியேற்றனர்
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 16ஆவது பட்டமளிப்பு விழா

Leave a Reply