ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, “உலக உறுப்பு தானம்” தினத்தை முன்னிட்டு, நேரடி கல்லீரல் உறுப்பு தானம் செய்தவர்களை கௌரவிக்கும் விழாவை நடத்தியது.
இந்த விழாவின் நோக்கம், உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துரைப்பதோடு, தன்னார்வத் தானம் வழங்கியவர்களின் தியாகத்தையும் கௌரவிப்பதாகும்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, “உலக உறுப்பு தான தினம்” விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. “வாழ்க்கை எனும் பரிசை கொண்டாடுவோம் – எங்கள் உயிருடன் இருக்கும் கல்லீரல் தானதாரர்களை கௌரவிப்போம்” என்ற தலைப்பில், இந்த நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்லீரல் தானம் செய்பவர்களின் பங்களிப்பை பாராட்டி, உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகத் தலைவர் ஆர். சுந்தர் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார். வரவேற்புரை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மூத்த ஆலோசகர், மயக்கவியல் துறை டாக்டர் வி. பிரேம் சந்தர் வழங்கினார்.
உயிருடன் கல்லீரல் தானம் செய்தவர்களை கௌரவிக்கும் இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தும் வகையில் இணை மேலாண்மை அறங்காவலர் ஆர். நரேந்திரன் பங்கேற்பு வழங்கினார். நிகழ்ச்சிக்கு சிறப்பையும் உற்சாகத்தையும் கூட்டும் வகையில், அலைட் ஹெல்த் சயன்ஸ் மாணவர்கள் உறுப்பு தானத்தின் செய்தியை மக்களுக்கு சுவாரஸ்யமாகவும் நினைவில் நிற்கும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த, வண்ணமிகு ஃப்ளாஷ் மாப் நிகழ்த்தினர்.மேலும், நிகழ்ச்சிக்கு மனதை உருக்கும் ஒரு காணொளியும் வெளியிடப்பட்டது. அதேபோல், அவசரமாக உதவி தேவைப்பட்டவர்களுக்கு உயிர் அளித்த நேரடி தானம் அளித்தவர்கள், அவர்களின் உயர்ந்த சேவைக்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை கௌரவித்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆலோசகர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெய்பால் வழங்கிய நன்றியுரையுடன் நிறைவடைந்தது.



Leave a Reply