,

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில்​ மாநில அளவிலான வணிகவியல் தொழில்நுட்ப போட்டிகள்

sri ramakrishna college of arts and science
Spread the love

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், பி.காம்., ப்ரொபஷனல் அக்கவுண்டிங் துறை சார்பில், “புரோஃபீஸ்ட்-2024” என்ற மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான வணிகவியல் தொழில்நுட்பப் போட்டிகள், கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
இதன் தொடக்க விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார்.
பி.காம். ப்ரொபஷனல் அக்கவுண்டிங் துறைத்தலைவர் முனைவர் தே.சந்தானகிருஷ்ணன், தொழில்நுட்பப் போட்டிகளின் முக்கியத்துவம், அதை மாணவர்களுக்கு இடையே நடத்த வேண்டிய அவசியம் குறித்துப் பேசினார்.
சிவா கிருஷ்ணா அன்ட் கோ லிமிடெட் நிறுவன பங்குதாரர் எஸ்.சிவா, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பின்னர் சி.ஏ.,  சி.எம்.ஏ., சி.எஸ்., தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், கல்வியில் சிறந்து விளங்குபவர்கள், விளையாட்டில் சிறந்து விளங்குபவர்கள் என 20 மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு இடையே வணிகவியல் தொடர்பான வணிக திட்டங்கள் உருவாக்குதல், பென்சில் ஓவியங்கள் வரைதல், இலச்சினை வடிவமைத்தல், போஸ்டர் வடிவமைப்பு, புதையல் தேடுதல், புகைப்படம் எடுத்தல், இ-ஸ்போர்ட்ஸ், கனெக்சன்ஸ் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் 20 கல்லூரிகளைச் சேர்ந்த 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக “ஃபினாபோர்ஜ்” மாணவத் தலைவர் ஜி.கோகுல்நாத் வரவேற்றார். முடிவில் மாணவ செயலர் வி.வஷிகா நன்றி கூறினார்.