, ,

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கோவை இரயில் நிலைய தூய்மைப்பணியில் பங்கேற்பு

sri ramakrishna college of arts & science
Spread the love

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் கோயம்புத்தூர் விழாக் குழுவினர் ஆகியோர் இணைந்து கோவை ரயில் நிலையத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்விற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். கோவை ரயில் நிலையத்தில் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் தூய்மைப்பணிகளை மேற்கொண்டனர். பொது மக்களுக்குத் தூய்மையின் அவசியத்தை உணர்த்தும் வகையில் தெரு நாடகம் நிகழ்த்தினர். ரயில் நிலையத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் தூய்மை குறித்தான பேரணி நடத்தினர். தொடர்ந்து ரயில்வே துறையின் பிரத்யேக செயலியான (APP) யுடிஎஸ் (UTS) பயன்பாடு குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தினர்.
அதைத் தொடர்ந்து, நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களின் சேவைகளைப் பாராட்டி கோவை ரயில் நிலைய இயக்குநர் பவன்குமார் வர்மா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.எல்.சிவக்குமாரிடம் பாராட்டுக் கடிதம் வழங்கினார்.
நிகழ்வில் துணை நிலைய மேலாளர் சதீஷ், தலைமை சுகாதார ஆய்வாளர் நந்தல் மீனா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். தூய்மைப்பணி, தெருநாடகம், விழிப்புணர்வு பேரணி போன்ற நிகழ்வுகளில் கல்லூரியின் 100–க்கும் மேற்பட்ட நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வுகளைக் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் பிரகதீஷ்வரன், பேரா. சுபாஷினி, முனைவர் நாகராஜன், முனைவர் சஹானா ஃபாத்திமா, முனைவர் பிரவீன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.