விஜய் இளம்பெண்களை கட்டிபிடித்தார் என்று சொன்னேனா? -வேல்முருகன் பாய்ச்சல்

Spread the love

கடந்த சில நாட்களுக்கு முன்பாக சேலத்தில் பேசிய வேல்முருகன், சினிமா நடிகர்களை மாணவிகள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அனுமதிப்பதா தமிழர் கலாச்சாரம்? போயஸ்
கார்டனில் நடிகனின் தரிசனத்துக்கு காத்திருப் பதால் வீட்டில் உலை வெந்து விடுமா?” என்று நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் ஆகியோரை கடுமையாக விமர்சித்திருந்தார். வேல்முருகனின் இந்த பேச்சுக்கு தவெக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக, கடலூரில் வேல்முருகன் கூறுகையில், விஜய் கட்சியை தொடங்கியபோது ஒரு தமிழனாக அந்த கட்சியை நான் வரவேற்றேன்.
ஆனால், எடுத்தவுடன் நான் சட்டமன்றத்திற்கு செல்வேன் என்ற அறிவிப்பில் எனக்கு உடன் பாடில்லை. 10 ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்துவிட்டு தேர்தலில் நிற்கலாம் என்று அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைத்தேன்.
சேலம் கூட்டத்தில் பல இளம் பெண்கள் சினிமா கதாநாயகர்களையே தங்களுக்கான அவதார புருஷர்களாக நினைத்துக்கொண்டு, அவர்களை கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது பெற்ற தாய் தந்தையரின் முன்னிலையில் அதுபோன்று அநாகரிக செயல்களில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என்று சொன்னேன்.
அதேபோல, காமராஜரோடு விஜய்யை ஒப்பிட்டு பேசுவது ஏற்புடையது அல்ல என்று பேசினேன். ஒரு மணி நேரம் 40 நிமிடம் பேசிய என்னுடைய உரையை முழுமையாக கேட்காமல், சில அரைகுறை வேக்காடுகள் எங்கள் தளபதி பற்றி பேசிவிட்டாய் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை விடுவது எல்லாம் வேண்டாம். இதை யெல்லாம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
விஜய் இளம்பெண் களை கட்டிப்பிடித்து முத்தமிட்டார் என்று நான் பேசவில்லை. நான் சொல்லாத ஒன்றை சொல்லியதாக நீங்கள் எப்படி எடுத்துக்கொள்ளலாம். எங்கள் கட்சியினரை நேற்றைக்கு பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த காளான்கள் பேச விஜய் அனுமதிக்க கூடாது.
என் மீது ஆட்சேபனை இருந்தால், விஜய் பத்திரிகையாளர்களை சந்தித்து கேள்வி கேட் கட்டும்” என்று தெரிவித்தார்.