தே.மு.தி.க கட்சி தலைவர் விஜயகாந்த் ஒரு பேட்டியின் போது, எடக்கு மடக்காக செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்க சட்டென்று உணர்ச்சிவசப்பட்ட விஜயகாந்த் ,’ சொல்லிட்டே இருக்கே. கேக்கலனா தூக்கி அடிச்சுடுவேனு அடிச்சிடுவேனு சொன்னார். அப்போது, அவர் சொன்ன வார்த்தைகளை ஹைதரபாத்தில் நடிகர் மோகன்பாபு செய்து காட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் மோகன்பாபுவுக்கு விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என்கிற இரண்டு மகன்களும், லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளனர். இவர்களும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். நடிகர் மோகன்பாபு குடும்பத்துக்குள் கடந்த சில நாட்களாக சொத்து பிரச்சினை இருந்து வந்தது. சில நாட்களுக்கு முன், சொத்து பிரச்சினை காரணமாக தனது மகன் மனோஜ் தன்னைத் தாக்கியதாக ஹைதராபாத் பனஹாகிரி ஷெரிப் காவல் நிலையத்தில் நடிகர் மோகன்பாபு புகார் அளித்தார்.
பதிலுக்கு நடிகர் மனோஜ் 100-க்கு போன் செய்து தன்னையும் தனது மனைவியையும் தனது தந்த மோகன்பாபு தாக்கியதாக புகார் சொன்னார். இதனிடையே , கடந்த 10 ஆம் தேதி இரவு நடிகர் மஞ்சு மனோஜ் தனது ஆதரவாளர்கள் மற்றும் செய்தியாளர்களை அழைத்துக் கொண்டு தனது தந்தை மோகன்பாபு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இரும்புக் கேட்டுக்கு வெளியே நின்றபடி கதவைத் திறக்கும்படி கத்தினார். உள்ளே, நடிகர் மோகன்பாபுவின் ஆதரவாளர்களும் இருந்தனர். ஒரு கட்டத்தில் கேட்டை தள்ளிக் கொண்டு நடிகர் மனோஜின் ஆதரவாளர்கள் உள்ளே சென்றனர்.
செய்தி சேகரிக்கும் ஆர்வலத்தில் செய்தியாளர்களும் உள்ளே ஓடினார்கள். அப்போது, இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து செய்தியாளர்கள் மீது நடிகர் மோகன்பாபுவும் தாக்குதல் நடத்தினார். செய்தியாளர்கள் வைத்திருந்த மைக்கை பறித்து அவர்கள் தலையிலேயே ஓங்கியடித்தார். அடி வாங்கிய செய்தியாளர்கள் கதறியபடி அங்கிருந்து தப்பி ஓடினர் .சண்டையில் நடிகர் மனோஜின் சட்டையும் கிழிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. தொடர்ந்து, போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். நடிகர் மோகன்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, எதிர்தரப்பினர் தன்னை தாக்கியதாக மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். இந்த நிலையில், மோகன்பாபுவின் மகன் மனோஜ், செய்தியாளர்களை தனது தந்தை தாக்கியதற்காக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். திருப்பதியிலுள்ள மோகன்பாபு பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பது தொடர்ந்து, நடிகர் மோகன்பாபுவுக்கும் அவரின் மகன் மனோஜூக்கும் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.
விஜயகாந்த் சொன்னார், மோகன் பாபு செய்தார்… செய்தியாளர்களுக்கு ‘மைக்’ அடி!

Leave a Reply