, , ,

ராயல்கேர் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

Royal care Institute of Nursing
Spread the love

ராயல் கேர் நர்சிங் கல்லூரியில்  நைட்டிங்கேல்  அம்மையார்  நினைவு கூறும் வகையில் விளக்கேற்றும் விழா மற்றும் உறுதி மொழி ஏற்பு விழா  கல்லூரி வளாகத்தில்  நடைபெற்றது . ராயல் கேர் மருத்துவமனை தலைவர்  மற்றும் ராயல் கேர் நர்சிங் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர்  டாக்டர்  க . மாதேஸ்வரன்  நிகழ்ச்சிக்கு தலைமை  வகித்தார்,  மேலும் மாணவ மாணவியர்களுக்கு செவிலியர் முக்கியத்துவம்  பற்றி  உரையாற்றினார் . டாக்டர்  எம் கௌரி, குடும்ப நல  துணை இயக்குனர் சிறப்பு விருந்தினராக  பங்கேற்று மாணவ மாணவிகளை  சிறப்பாக பணி செய்யுமாறு  வாழ்த்தினார்.

விளக்கேற்றுவது மாணவர்களிடையியே  செவிலிய  அறிவு, திறன் மற்றும்   பணியின் ஆத்மார்த்தமான மனப்பான்மை  பரிமாற்றத்தை குறிக்கிறது . மேலும்  பி.எஸ்.சி நர்சிங் மற்றும் டி.ஜி. என் .எம் முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகள்  நைட்டிங்கேல் உறுதி மொழி  ஏற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *