மானியம் பெறும் காலம் நீண்டு கொண்டே போகிறது -ஜெ ஜேம்ஸ், தலைவர்,டாக்ட் சங்கம்.

Spread the love

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் டாக்ட் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம். மாவட்ட அலுவலகத்தில 13.6.2025 ல் தலைவர் ஜே.ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது,

இக்கூட்டத்தில்  பொதுச் செயலாளர் G.பிரதாப் சேகர் பொருளாளர் M.லீலாகிருஷ்ணன் துணைத் தலைவர்கள் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள குறுந்தொழில் முனைவோர்கள் மாநில அரசு வழங்கும் இயந்திரங்களுக்கான மானியம் பெறுவதற்கு கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகின்றனர்

குறுந்தொழில் முனைவோர்கள் ஜாப் ஆர்டர் மற்றும் உதிரிபாகங்கள் செய்து கொடுக்கின்றனர் பல்வேறு நிறுவனங்களில் இருந்து கிடைக்க பெறும் ஆடர்களை நம்பி தொழில் செய்து வரும் இவர்களுக்கு 12 மாதங்களும் ஆடர்கள் கிடைக்க பெறுவதில்லை உற்பத்தித்துறையில் ஏற்பட்டிருக்கும் கடும் நெருக்கடியால் எங்கள் தொழிலுக்கு தொழிலாளிகள் கிடைக்கப் பெறாததால் லேத் மில்லிங் மெஷின் சேப்பிங் மெஷின் பணிகளுக்கு தொழிலாளிகள் வேலைக்கு கிடைக்காத சூழ்நிலை தொடர்ந்து வருவதால் லேத் மிசின் மில்லிங் மிசின் போன்ற இயந்திரங்களில் பயன்படுத்த முடியாத அளவுக்கு நெருக்கடிகளை குறுந்தொழில் முனைவோர்கள் சந்தித்து வருகின்றனர் தங்கள் தொழில்களை தொடர்ந்து நடத்துவதுகாக குறுந்தொழில் முனைவோர்கள் ஆட்டோமேட்டிக் இயந்திரங்கள் சிஎன்சி விஎம்சி போன்ற இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு வங்கி மூலமாகவும் தனியார் நிதி நிறுவனங்கள் மூலமாகவும் உறவினர்களிடமிருந்து கடன்களை பெற்று இயந்திரங்கள் புதிதாக வாங்கி வருகின்றனர் .

புதிய இயந்திரங்கள் கொள்முதல் செய்கின்றவர்களுக்கு தமிழக அரசு 25 சதவீதம் மானியம் வழங்குவது குறுந்தொழில் முனைவோர்களுக்ககும் சிறு தொழில் முனைவோர்களுக்கும் பெரும் உதவியாக இருந்து வருகிறது மானியம் பெறுவதற்கான பல்வேறு விதிகளும் நடைமுறை சிக்கலும் தொடர்ந்து இருந்து வருவதால் அதிகாரிகளின் ஆய்வின் பொழுது உண்மையான குறுந்தொழில் முனைவோர்கள் அதிகாரிகள் கேட்கின்ற பேப்பர்களை யும் கேட்கும் பல்வேறு சான்றிதழ்கள் எடுப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் இதனால் உண்மையான குறுந்தொழில் முனைவோர்கள் பலருக்கும் மானியம் பெற முடியாமலும் போகிறது மாநில அரசு மானியம் பெறுவதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் விண்ணப்பம் செய்யும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு அவர்கள் வாங்கும் இயந்திரங்களுக்கு மானியம் கிடைப்பதுகான வழிமுறைகளை எளிமைப்படுத்திட மாநில அரசை இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது

புதிதாக வாங்கும் இயந்திரங்களுக்கு மானியம் பெறுவதற்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் இயந்திரங்களை இயக்கி அதன் பிறகு மாவட்ட தொழில் மையத்தில் மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது

பதிவு செய்யும் விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்கு அதிகாரிகள் வருவதற்கு பல மாதங்கள் வரையும் கால தாமதம் ஆகிறது இந்த நிலையால் விண்ணப்பிக்கும் தொழில் முனைவோர் மானியம் பெறுவதற்கு மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது

மாவட்டத் தொழில் மையத்தில் அதிகாரிகள் பற்றாக்குறை என்று அறிகிறோம் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்கின்ற தொழில் முனைவோர்கள் நிறுவனங்களுக்கு ஆய்வுக்கு வருகின்ற அதிகாரிகள் மாதக்கணக்கில் நாட்கள் எடுத்துக் கொள்வதால் மானியம் பெறும் காலம் நீண்டு கொண்டே போகிறது ஆகையால் கோவை போன்ற தொழில் நகரங்களில் அரசு முழுமையான அதிகாரிகள் நியமனம் செய்ய வேண்டும் என்று இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது