,

போசியா உறுப்பினர்கள் கோவை மாவட்ட தலைமை மின் பொறியாளரை சந்தித்து பேச்சுவார்த்தை

focea
Spread the love

கோவை மாவட்ட தலைமை மின் பொறியாளர் குப்பு ராணியை கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவின் சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் ஜே.ஜேம்ஸ், எம்.ரவீந்தரன் தலைமையில், மின்சார வாரியம் எந்த விதமான முன் அறிவிப்பும் இல்லாமல் 18 கிலோ வாட் வரை மின்சாரத்தை பயன்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கபட்டது சம்பந்தமான 24.9.2024ல் தந்த மனு குறித்து பதில் அளிக்குமாறு கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “நாங்களாக அபராதம் விதிக்கவில்லை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 14.9.2024 தேதியில் மூன்று கிலோ வாட்டுக்கு மேல் LT CT மற்றும் கமர்சியல் மின்சாரத்தை பயன்படுத்துவர்களுக்கு பவர் பேக்ட் அடிப்படையில் அபராதம் விதிக்க அனுமதி வழங்கியதின் அடிப்படையில் 1.7.2024 தேதியில் இருந்து மீட்டரில் காட்டப்படுகின்ற மின் சேதாரத்தின் அடிப்படையில் அபராத தொகையுடன் வசூலிப்பதற்கு அனுமதி வழங்கியது ஆகையால் முன் தேதியிட்டு அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. நீங்கள் மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தின் மூலமும் ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலமாக தான் அபராதம் விதிப்பது சம்பந்தமாக அணுக வேண்டும்” என்று கூறினார்.
அபராத தொகையுடன் மின் கட்டணத்தை அதுவரை நீங்கள் செலுத்த வேண்டும் என்று வழிகாட்டலும் தந்துள்ளார். தமிழகத்தில் கோவை மண்டலத்தில் மட்டும் 58 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள்
12 கிலோ வாட்டுக்கும் குறைவான மின் இணைப்பு பெற்று மின்சாரத்தை பயன்படுத்தும் மாவட்டம் இந்த அபராத விதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறுந் தொழில் முனைவோருக்கு உதவிட வசூலிக்கப்படுகின்ற அபராத தொகையை திருப்பி தந்திடவும், கால அவகாசம் வழங்கிடவும், இந்த பிரச்சினையில் தமிழக அரசும் தலையிட்டு பரிசீலித்து வழி காட்ட வேண்டும் என்று கூட்டமைப்பின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.