கோவை மாவட்டம், பேரூரில் உள்ள பிரபலமான ஸ்ரீ பட்டீஸ்வரர் திருக்கோவிலில் ஆகம விதிகளை மீறி ஒரு தனிப்பட்ட விஐபி நபருக்காக கோவில் கருவறை கதவுகள் பள்ளியறை நிகழ்ச்சி முடிந்த பிறகும் திறக்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே கடும் பதற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆகம விதிகளின்படி, கோவில் நடைகள் ஒருமுறை இரவு சாத்தப்பட்ட பின்பு எந்தவிதமான விதிவிலக்கும் இன்றி மீண்டும் திறக்கக் கூடாது என்பது ஒரு முக்கியமான நெறிமுறை. இந்நிலையில், கோவிலின் உதவி ஆணையர், பள்ளியறை நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு முக்கிய விஐபிக்கு தரிசனம் செய்ய வசதியாக கருவறை கதவுகளை திறந்து, ஆகம விதிகளை நேரடியாக மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த செயல் குறித்து ஒரு பக்தர் எழுப்பிய முறையீடுகளுக்கும், கேள்விகளுக்கும் எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை. இதனால், கோவில் மரியாதையும், ஆகமச் சட்டங்களும் கேள்விக்குள்ளாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சம்பவத்தை தீவிரமாக எதிர்த்து, ஆகம விதிகளை மீறி செயல்பட்ட கோவிலின் உதவி ஆணையர் மற்றும் விஐபி நபர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஹிந்து அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டிய நேரம் இது.
Leave a Reply