,

நேபாள விமான விபத்து: காத்மாண்டுவில் விமானம் புறப்படும் போது விபத்தில் 18 பேர் பலி…

nepal
Spread the love

காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் புறப்பட்ட சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது வினாடியில் விபத்துக்குள்ளானது. சௌர்யா ஏர்லைன்ஸ் நிறுவனம் 50 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட மூன்று விமானங்களைக் கொண்ட உள்நாட்டு விமான நிறுவனமாகும். இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தின் போது விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 19 பேர் இருந்தனர். இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர் விமானத்தின் பைலட் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பக்கட்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது. விமான நிலைய ஓடுபாதைக்கு அருகே விழுந்த இந்த விமானம் தீப்பற்றி எரிந்ததை அடுத்து பயணிகள் உயிர்பிழைக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இன்று காலை 19 பயணிகளுடம் சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் பொக்காரா என்கிற ரிசார்ட் நகருக்கு செல்ல இருந்தது. இந்த விமானம் மேலேற ஓடுதளத்தில் சென்றுகொண்டிருந்த போதே, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அதன் ஓடுபாதையிலிருந்து சறுக்கி விபத்துக்குள்ளானது. கீழே விழுந்த விமானம் திப்பற்றி எரியத் தொடங்கியதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

விசாரணையில், அந்த விமானம்  ஓடுதளத்தில் இருந்து வேகமாக மேலே எழ முயன்றதால் விபத்து நேர்ந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் கீழே விழுந்த உடனேயே விமானம் தீப்பற்றி எரியத் தொடங்கியதால் அதில் பயணித்த  பைலட் தவிர மற்ற 18  பேரும் கருகி உயிரிழந்ததுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கீழே விழுந்த விமானம் முற்றிலுமாக எரிந்து சாம்பலான நிலையில் அதில் பயணித்த 18  பேர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.