, ,

நம் மண்ணுக்கு மட்டுமல்ல ‘குடும்பத்துக்கும் ஏற்றவள்’ அரியலூர் இளைஞரின் மியான்மர் காதல்

myanmar
Spread the love

அரியலூர் அருகே உள்ள இரசுலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதிவதணன். டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்த இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் யூ வின் மங் – டாயஹ்ல் அவின். இவர்களின் மகள் ஏய் ஏய் மோ சிங்கப்பூரில் உள்ள உணவு தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் மதிவதணனுக்கும், ஏய் ஏய் மோவுக்கும் அறிமுகம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், அரியலூரில் மதிவதணனுக்கு அவரது பெற்றோர் பெண் பார்க்கத் தொடங்கியுள்ளனர். அப்போது மியான்மர் பெண்ணை காதலிக்கும் விஷயத்தை தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். நம்ம ஊரு
பழக்க, வழக்கம் வேற எப்படிப்பா ஒத்து வரும் என மதிவதணன் பெற்றோர் கேட்டுள்ளனர். அப்போது அவள் ரொம்ப அன்பானவள் பழகினால் உங்களுக்கே அவளை பிடிக்கும், நம் மண்ணுக்கு மல்ல, குடும்பத்துக்கும் ஏத்தவள் என கூறி தன் பெற்றோரின் சம்மதத்தை பெற்றுள்ளார்.இதே போல், ஏய் ஏய் மோவும் காதலிக்கும் விஷயத்தை சொல்லி தன் பொற்றோரின் சம்மதத்தை பெற்றுள்ளார். பின்னர் மணமக்கள் கடந்த 17 ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்தனர்.
இதற்கிடையே, மணப்பெண் ஏய் ஏய் மோவின் பெற்றோருக்கு விமான டிக்கெட் கிடைக்காததால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. எனினும், கடந்த 28 ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு மியான்மரிலிருந்து வீடியோ கால் மூலம் போன் செய்தார் மணப்பெண்ணின் தாய். அப்போது, மணக்கள் இருவரும் செல்போன் முன்பு விழுந்து பெற்றோரிடம் ஆசி வாங்கினர். இந்த தருணத்தில் ஏய் ஏய் மோ கண்கள் ஆனந்தத்தில் கலங்கி காணப்பட்டது.