சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி சார்பில் செப்டம்பர் 27ம் தேதி அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தாவிற்கு இந்திய சினிமாவின் மதிப்புமிக்க ‘ஆண்டிற்கான சிறந்த பெண்’ விருது வழங்கப்பட உள்ளது.
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏ மாய சேசவே, ஈகா, நீதானே என் பொன்வசந்தம், மகாநதி மற்றும் சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே புகழ் பெற்றவர். இந்திய திரைத்துறைக்கு பல ஆண்டுகளாக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் நடிகை சமந்தாவிற்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ராம் சரண் மற்றும் பாலகிருஷ்ணா உட்பட பல சினிமா பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கவுரவ விருதை வழங்குவதற்காக நடிகை சமந்தா நன்றி தெரிவித்துள்ளார். ஒரு கலைஞராகவும், ஒரு பெண்ணாகவும் இந்த விருதை பெறுவது பெருமையாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
Leave a Reply