தினசரி 1 கோடி லிட்டர் தண்ணீர் வேஸ்ட் ; சிறுவாணி அணையில் லீக்கேஜ்

siruvani dam
Spread the love

சிறுவாணி டேமில் ஏற்பட்டுள்ள லீக்கேஜ்களினால் மட்டும் நாள் ஒன்றுக்கு 1 கோடி லிட்டர் தண்ணீர் வீணாவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை நகருக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை கேரள மலைப்பகுதியில் அமைந்துள்ளது. கோவை மாநகரத்தில் பல லட்சம் மக்கள் இந்த தண்ணீரை நம்பி இருக்கின்றனர். இந்த அணையில் ஆங்காங்கே பல இடங்களில் லீக்கேஜ்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், கோவை மாநகருக்க 3 நாட்கள் விநியோகிக்க போதுமான ஒரு லிட்டர் தண்ணீர் தினமும் அணையில் இருந்து வீணாவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்த, கோவை மாநகராட்சி அதிகாரிகள், சென்னை ஐஐடி நிபுணர்கள், மத்திய மற்றும் கேரள, தமிழக நீர் மேலாண்மை துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி 8ம் தேதி அணையை ஆய்வு செய்து விரைவான அறிக்கையை கோவை மாநகராட்சியிடம் அளித்துள்ளனர்.

இதையடுத்து, அணையை பலப்படுத்துவ்து குறித்து கேரள அதிகாரிகளுடன் இணைந்து கோவை மாநகராட்சி முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த அணையை பராமரிக்க தமிழக அரசு கேரளாவுக்கு பணம் கொடுக்கிறது. தமிழக அரசு தேவையான பணம் கொடுத்ததும், லீக்கேஜ்களை சரி செய்யும் நடவடிக்கை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, பருவமழை தொடங்கியுள்ளதால், இந்த லீக்கேஜ்களை விரைவில் சரி செய்ய வேண்டுமென்பதே கோவை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.