,

தருமபுரியில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு

ramraj cotton
Spread the love

தென் மாநிலம் முழுவதும் வெண்மை நிற ஆடைகளை உற்பத்தி செய்து, விற்பனையில் சாதனை படைத்து வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தங்களது அடுத்த புதிய ஷோரூமை தருமபுரியில் 3/1 பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எதிரில், சேலம் மெயின் ரோடு, என்ற முகவரியில் துவங்கி உள்ளது.
டி.என்.சி.கல்வி குழுமத்தின் தாளாளர் டி.என்.சி. மணிவண்ணன் புதிய ஷோரூமை திறந்து வைத்தார். மருத்துவம் (ம) ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மரு. ம. சாந்தி மங்கள ஒளி ஏற்றி வைத்தார்
ஸ்ரீரங்கா டிபார்ட்மென்ட் ஸ்டோர் உரிமையாளர் ஆர். துரைராஜ் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். செந்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் செந்தில் குழுமத்தின் தலைவர் செந்தில் சி. கந்தசாமி மற்றும் செந்தில் கல்வி அறக்கட்டளையின் துணைத்தலைவர் கே. மணிமேகலை முதல் விற்பனையை பெற்றுக்கொண்டனர். விழாவிற்கு வந்திருந்தவர் களை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன் வரவேற்றார்.