தமிழக முதல்வர் கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி சார்பில் முடிவுற்ற பணிகளை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி சார்பில் முடிவுற்ற பணிகளை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
அதன்படி, ஆடிஸ் வீதி அறிவுசார் மையம், உக்கடம் பெரியகுளம் மேற்கு கரையில் அமைந்துள்ள அனுபவ மையம், குறிச்சி குளக்கரையில் புனரமைத்தல் பணியில் ஒரு அங்கமாக அமைக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை மற்றும் கிழக்கு குளக்கரையில் அமைந்துள்ள தமிழர் பாரம்பரிய சிலைகள் ஆகியவற்றை முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணைமேயர் வெற்றிச்செல்வன், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், மண்டல தலைவர்கள் மீனா லோகு, இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கதிர்வேல், தனலட்சுமி, மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply