மக்களவை தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் யு.எம்.டி ராஜா 100% வாக்குப்பதிவை எடுத்துரைக்கும் விதமாக 2 கிராம் தங்கத்தில் பூட்டு சாவியை உருவாக்கி உள்ளார். இரண்டு கிராம் தங்கத்தில் இந்திய வரைபடத்துடன் கூடிய ஒரு பூட்டையும், 100% வாக்கு என்ற சாவியையும் உருவாக்கி உள்ளார். மேலும் அந்த சாவியில் தேர்தல் நடைபெறும் 19ஆம் தேதியை குறிப்பிடும் வண்ணம் 19 என்ற எண்ணையும், தேர்தல் முத்திரையையும், தேர்தல் மை வைத்த விரலையும் வடிவமைத்துள்ளார்.
Leave a Reply