கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி, பசுமை தமிழ்நாடு இயக்கம் (Green Tamilnadu Mission) திட்டத்தின் கீழ் ‘மரம் நடும் விழா’ தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டல பகுதிகளில் உள்ள மாநகராட்சி பூங்காக்கள், திறவிடங்கள், குளக்கரை நீர்வழித்தடங்களின் கரைகளில் என சுமார் 264 இடங்களில் வேம்பு, பூவரசன், புங்கன் மற்றும் நாவல் உள்ளிட்ட 10,123 வகைகளான மரங்கள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்படவுள்ளது.
இதை ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி ஹவுசிங்யூனிட் அருகில் மரக்கன்றுகள் நடும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் இன்று துவக்கி வைத்தார்.
Leave a Reply