, , ,

கோவையில் வேளாண் கண்காட்சி – கொடிசியா வளாகத்தில் துவங்கியது…..

codissia
Spread the love

கொடிசியா தொழிற்கூட கண்காட்சி வளாகத்தில் 22வது சர்வதேச வேளாண் கண்காட்சி  இன்று துவங்கியது. சர்வதேச அளவில் நடைபெறும் இந்த கண்காட்சி இன்று  தொடங்கி 15 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் இந்தியாவை சேர்ந்த நாட்டுமாடுகளும் வெளிநாட்டு வகை ஆடுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு வகையான விதைகள், இயற்கை குளிரூட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி தோட்டக்கலை சார்பில் நர்சரிகள் அமைக்கப்பட்டு பல்வேறு ரக கொடிகள், பூச்செடிகள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.

வழக்கமாக 4 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி இந்த ஆண்டு 5- நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் 450க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வேளாண் விவசாய பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் நிறுவனங்களும் அதுமட்டுமின்றி மலேசியா சிங்கப்பூர் சைனா தென்கொரியா உட்பட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் அவர்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.