கோவையில் கட்டப்பட உள்ள பீனிக்ஸ் மாலின் கட்டுமானம் விரைவில் தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான ‘தி ஃபீனிக்ஸ் மில்ஸ் லிமிடெட்’ கோவையில் முதலீடு செய்யவுள்ளது.
இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்ததுப்படி, தற்போது அந்த நிறுவனத்தின் கீழ் 10 மால்கள் இயங்கி வருகின்றன. மேலும், இந்தியா முழுவதும் 3 புதிய மால்கள் கட்டப்பட்டு வருகின்றன. கோயம்புத்தூர், ஜெய்ப்பூர், சண்டிகர் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இந்த புதியமால்கள் உருவாக்கப்பட உள்ளன.
வேகமாக வளர்ச்சி பெற்றுவரும் கோவையில் ஏற்கனவே பல புதிய மால்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக ‘Alveal Fun Savy Mall’ என்ற மால்,நேதாஜி சாலை, வடவள்ளி அருகே சேரநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இதேபோல், லுலு ஹைப்பர் மார்க்கெட் கோவையில் இயங்கிக்கொண்டு இருக்கிறது.
தற்போது, பீனிக்ஸ் மாலின் கட்டுமானத் திற்கான வேலைகள் விரைவில் துவங்க உள்ளன என பீனிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.ஃபீனிக்ஸ் குழுமம் கோவையில் உள்ள அவிநாசி சாலையில் ரேடிசன் ப்ளூ ஹோட்டலுக்கு அருகில் பிரதான இடத்தில் நிலத்தை வாங்கியுள்ளது. அங்கு ஒரு பிரீமியம் தரம் கொண்ட மால் கட்டப்படவுள்ளது. இதன் மூலம் கோவையின் வணிக துறை மேலும் வளர வாய்ப்பு உருவாகியுள்ளது.
அதே நேரத்தில், கோவையில் உருவாகியுள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட், லட்சுமி மில் வளாகத்தில் அமைந்துள்ள துடன், இது தமிழ்நாட்டில் இந்நிலையில் உருவாக்கப் பட்ட மிகப்பெரிய ஹைப்பர் மார்க்கெட் ஆகும். இந்தமால் 1.1 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. லுலு குரூப் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த மாலில், வணிக வளாகங்களில் ரூ.2,500 கோடியும், உணவு பதப்படுத்தும் பிரிவில் ரூ.1,000 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மால் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி திறக்கப்
பட்டது. மால்கள் மட்டுமல்ல, கோவையில் தற்போது பைவ் ஸ்டார் ஹோட்டல்களும் உருவாகத் தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில், சென்னைக்கு அப்பால் உள்ள மற்ற மாவட்டங்களிலும் பிரபல ஹோட்டல் நிறுவனங்கள் 3 மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்களைத் திறக்க ஆர்வம் காட்டுகின்றன.
இந்த வளர்ச்சி தமிழ் மாநிலத்தின் தொழில்துறை வளமாகும் பகுதிகளில் அதிகரித்து வருகின்ற தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களால் உருவாகி வருகிறது. பயணிகள் மற்றும் தொழிலதி பர்கள் தரமான வசதிகளை நாடுவதால், பெரிய ஹோட்டல் நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன.
இந்தியாவிலேயே பிரபலமான ஹோட்டல் பிராண்டுகள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் தற்போது கிருஷ்ணகிரி, ஓசூர், பெருந்துறை, கோவை, தூத்துக்குடி போன்ற இடங்களிலும், சென்னைக்கு அருகிலுள்ள ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளிலும் சொகுசு ஹோட்டல்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளன.
உதாரணமாக, ஐடிசி லிமிடெட் நிறுவனத்தின் பார்ச்சூன் பார்க் ஹோட்டல் லிமிடெட், கடந்த ஜனவரியில் கிருஷ்ணகிரியில் 107 அறைகள் கொண்ட ஹோட்டலைத் திறந்தது. தொழிற்சாலைகள் சூழ்ந்து உள்ள ஓசூரில் இந்த வகை ஹோட்டல்களுக்கு பெரும் வரவேற்பு இருப்பதால், வணிக வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ஜிஆர்டி ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்ததுடன், ஓசூர், ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரிலும் புதிய ஹோட்டல்கள் கட்ட திட்டமிட்டுள்ளது.
ஆட்டோமொபைல், பர்னிச்சர் மற்றும் விண்வெளி தொழில்கள் ஆகியவற்றில் திட்டங்கள் உருவாகி வரும் நிலையில், தூத்துக்குடி வி.ஓ.சி.துறைமுகத்தின் மேம்பாடுகள் காரணமாக, அந்த பகுதியிலும் புதிய ஹோட்டல்கள் உருவாகி வருகின்றன.
இந்த வளர்ச்சிகள் அனைத்தும் கோவையை மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் மற்ற நகரங்களையும் தொழில்துறை மற்றும் வணிக மையங்களாக மாற்றி வருகிறது.
கோவையில் பீனிக்ஸ் மாலின் கட்டுமானம் விரைவில் தொடங்கம்

Leave a Reply