,

குடியரசு தினத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பைக் பேரணி

republic day
Spread the love

கோவை கே.ஜி.சாவடியில் உள்ள தேசபக்தி கோட்டைக்கு கோவை ராமநாதபுரத்தில் இருந்து 100 பேர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.
கோவை ராமநாதபுரத்தில் உள்ள புல்மென் மோட்டார்ஸ் ராயல் என்ஃபீல்டு ஷோரூமில் இருந்து சென்னையின் 110 காலாட்படை பட்டாலியன் (டெரிட்டோரியல் ஆர்மி) கமாண்டிங் அதிகாரி கர்னல் தினேஷ் சிங் தன்வர் மோட்டார் சைக்கிள் பேரணியை
கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.
தேசபக்தியின் கோட் டையை பராமரித்து வரும் ஜெய்ஹிந்த் அறக்கட்ட ளையின் நிறுவனர் வழக்கறிஞர் வி.நந்தகுமார் கூறுகையில், ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ரைடர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். 100 பேரில் 10 பேர் பெண்கள் என்றார். ரைடர்ஸ் தேசபக்தி கோட்டையை அடைந்ததும், பி.வி.உக்குரு குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஜோஸ் உக்குரு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். புல்மென் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் வேதா விசாகன், வின்னர்ஸ் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குனர் சி.கே.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.