கோவையில் 95 வயது மூதாட்டிக்கு இரண்டு செண்ட் இடம் வழங்கியுள்ளார். முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி.
கோவை தொண்டா முத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி, வடிவேலம் பாளையம் பகுதியை சேர்ந்த 95 வயது பாட்டி கமலாத்தாள் இவர் பல வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார். லாபநோக்கு இல்லாமல் இவரின் இந்த சேவை கோவையில் பலராலும் பாராட்டபட்டு வருகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கமலாத்தாள் பாட்டியின், நேர்மையையும், சேவையையும் பாராட்டும் விதமாக அவரது பெயருக்கு பத்திரபதிவு செய்த நிலையில். இன்று இடத்தின் பத்திரத்தை கமலாத்தாள் பாட்டியிடம் ஒப்படைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
ஒரு ரூபாய் இட்லி பாட்டியின் சேவையை பாராட்டி தனது சொந்த செலவில் 2 செண்ட் இடம் வழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

Leave a Reply