கோவை
பணி நிரந்தரம், மாவட்ட ஆட்சியர் அறிவித்த 770 சம்பளம், தொழிலாளிகளிடம் பிடித்தம் செய்யப்படும் PF உள்ளடங்கிய சம்பள ரசீதை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். நான்காவது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய அவர், நீங்கள் நிரந்தர பணியாளர்களாக மாற வேண்டும் என்றார். இரண்டு நாட்களில் போராட்டம் முடிவுக்கு வரவில்லை என்றால் பாஜக உங்களுடன் சேர்ந்து போராடும் என தெரிவித்தார்.
Leave a Reply