இயற்கை விவசாயத்தைப் பரவலாக்கும் வகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அமுல் ஆர்கானிக் பெர்ட்டிலைஸர், ரிச் பிளஸ் ஆகிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தம் கடந்த மே 29-ம் தேதி சென்னையில் கையெழுத்தானது.
நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண் இயக்குநரும், முதன்மை செயல் அதிகாரியுமான அஜய்குமார் ஶ்ரீவஸ்த்வா பேசியபோது, “சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் விதத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1937-ல் தொடங்கப்பட்ட இந்த வங்கி, இந்தியா முழுவதும் 3,335 கிளைகளைக் கொண்டுள்ளது. இயற்கை விவசாயத்துக் கென்று இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறோம். இந்த நிகழ்வு ஒரு மைல்கல்.
தமிழ்நாட்டில் சென்னை நீங்காலக மற்ற 37 மாவட்டங்களிலும் ஐ.ஓ.பி வங்கியின் கிளையில் தள்ளுபடி விலையில் இயற்கை உரங்களை விவசாயிகள் வாங்கலாம். இதோடு 300 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடர்பில் உள்ளன. 1 லட்சம் விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்குள் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் இப்போது தொடங்குயிருக்கிறோம். தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் இதை முன்னெடுக்க இருக்கிறோம். ரசாயன விவசாயிகள், இயற்கை விவசாயிகள் அனைவரும் இதில் பயன்பெறலாம்.
.ஓ.பி வங்கியின் சார்பில் ‘ஹரித் கிராந்தி’என்ற திட்டத்தைத்தொடங்கியிருக்கிறோம். இதில் முக்கியமாக இயற்கை விவசாயத்துக்கு மாற நினைக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். ஒரு தனிநபர் விவசாயி, விவசாயிகள், குத்தகை விவசாயிகள், சுயஉதவிக் குழுக்கள் 50 லட்சம் வரை கடன் பெறலாம். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் 5 கோடி வரை கடன் பெறலாம். இந்தத் தொகையை 5 ஆண்டுகளில் கட்டலாம்’
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Leave a Reply