நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அதிகாரி மற்றும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு தமிழக அரசு உயர் பதவிகளை உள்ளடக்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 2 & 2A பதவிகளுக்கான தேர்வு தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
2030 காலிப் பணியிடங்களை உள்ளடக்கிய இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 & 2A பதவிகளுக்கான அறிவிக்கை ஜூன் 28,2024 அன்று நடைபெறும் என்றும் அதைத் தொடர்ந்து செப்டம்பர் 28, 2024 அன்று முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதனையொட்டி , கோவை ஆர்.எஸ். புரத்தில் அமைந்துள்ள நல்லறம் அறக்கட்டளையின் அம்மா ஐஏஎஸ் அகாடெமியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2&2A தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூன் இரண்டாம் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. இங்கு இலவச வகுப்புடன், நாள் முழுவதும் தங்கி கற்க இலவச படிப்பகம் மற்றும் நூலகம் வசதி உள்ளது. இலவச பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு 82201 92222 , 97888 32142 என்ற எண்களை அழைத்து பதிவு செய்யலாம்
அம்மா ஐஏஎஸ் அகாடெமியில் டிஎன்பிஎஸ்சி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்

Leave a Reply