நிபா வைரஸ் அச்சுறுத்தல்: கோவை எல்லையில் தீவிர சோதனை!

Spread the love

கேரளாவில் நிபா வைரஸால் 2 பேர் உயிரிழப்பு காரணமாக கோவை மதுக்கரை வட்டம் கந்தே கவுண்டர் எல்லைப்பகுதியில் மருத்துவக்குழுவினர் இன்று மதியம் 1 மணி அளவில் சோதனை

நிபா வைரஸ் பாதிப்​பால் கேரளா​வில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 2-ஆக உயர்ந்​துள்​ளது.இதையடுத்து கேரள மாநிலத்​தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்​கைகளை அந்த மாநில அரசு தீவிரப்​படுத்​தி​யுள்​ளது.கேரள மாநிலத்தில் ஆண்​டு​தோறும் கோழிக்கோடு,பாலக்​காடு,மலப்​புரம் உள்​ளிட்ட இடங்​களில் தொடர்ச்​சி​யாக நிபா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது.

இந்​நிலை​யில் பாலக்​காடு மாவட்​டம் மன்னார்​காடு பகு​தியை சேர்ந்த 57 வயது நபர் ஒரு​வர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

அதன் எதிரொலியாக தமிழகம் கேரளா எல்லைப் பகுதியான மதுக்கரை வட்டம் க க சோதனை சாவடியில் கோவை மாவட்ட சுகாதாரக் குழுவினர் மற்றும் மருத்துவ குழுவினர் கேரளாவில் இருந்து வரும் பேருந்துகள்,லாரிகள்,நான்கு சக்கர வாகனம்,இரு சக்கர வாகனங்கள் வரும் பயணிகளை தீவிர சோதனைக்கு பிறகு தமிழகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.

அதேபோல கேரளாவில் இருந்து வரக்கூடிய நபர்களை மாஸ்க் அணிந்து வருமாறு வலியுறுத்தி வருகின்றனர்.